டாக்டர் மா.இராசமாணிக்கனார்
259
அமிர்தபானம் (பாடல் 8) , மிதுனம், புன்னாகம், சண்பகம், குந்தம், மல்லிகாமாலை (பாடல் 11], யாத்திரை, பிரமம், இரதி, சோபனம் (பாடல் 19), வந்திக்க, சிந்திக்க (பாடல் 20) முதலிய வடசொற்கள் பரிபாடல்களின் பிற்காலத்தை உணர்த்துகின்றன.6 [1]
3. சங்ககாலத்திற்குப் பின்பே திருவேங்கடம், திருவரங்கம், திருமாலிருஞ்சோலைமலை, திருவனந்தபுரம் என்பன வைணவத் தளிகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. பின்வந்த ஆழ்வார்கள் இத்தளிகளைப் பாடியுள்ளனர். சிலப்பதிகாரத்திலும் இவை குறிக்கப்பட்டுள்ளன. திருமாலிருஞ்சோலை மலை பரிபாடலில் குறிக்கப்படலால் பரிபாடலின் காலம் கி.பி. 600 என்னலாம்.7 [2]
4. கி. பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தர் திருப்பரங்குன்றத்துச் சிவபெருமானைப் பாடியுள்ளார்; ஆயின், முருகனைப்பற்றிப் பாடவில்லை. எனவே, சம்பந்தருக்குப் பின்பே முருகன் கோவில் உண்டாயிற்று என்று கூறலாம். பரிபாடலில் அம்முருகனைப் பற்றிய பாடல்கள் இருத்தலால் அப்பாடல்களின் காலம் ஏறத்தாழக் கி.பி. 700 என்னலாம்." 8 [3]
5. கி. பி. 300க்கு முற்பட்ட தமிழிலக்கியத்தில் அகத்தியரைப் பற்றிய பேச்சே இல்லை. ஆனால் பரிபாடலில் அகத்தியர் 'பொதியில் முனிவன்' (பாடல் 11, வரி 11) என்று குறிக்கப்பட்டுள்ளார். 9 [4]
6. கி. பி. மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட அபிஷேக பாண்டியன் காலத்தில்