பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


யும் உடைய துருவ சக்கரத்தைப் பொருந்திய சூரியன் முதலாக உள்ள கோள்களின் நிலைமையை விளக்கும் ஒவியம் ஒன்றாகும். இரதி மன்மதனைக் குறிக்கும் ஒவியம் மற். றொன்றாகும். கெளதமன், அகலிகை, இந்திரன் உருவங் களையும் இந்திரன் எடுத்த பூனை உருவத்தையும் வேறோர் ஒவியம் உணர்த்தினது இத்தகைய ஓவியங்கள் பல அம் மண்டபத்தில் தீட்டப்பட்டிருந்தன (19, வரி 46-53} . ஒவியங்களைப்பற்றிய இத்தகைய தெளிவான குறிப்பு வேறு சங்க நூல்களில் இல்லை எனபது இங்கு அறியத்தகும்.

பேரெண்கள் : நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் என்பவை நீண்ட காலங்களைக் குறிக்கும் பேரெண்கள் ஆகும் 12, வரி 13-14) , திருமால் பற்றிய தனிப் பாடல் ஒன்றில் தோழம் என்பது ஒரு பேரெண் என்று குறிக்கப்பட்டுள்ளது. ஒருகை, இருகை முக்கை...எண்கை, ஒன்பதிற்றுக்கை, பதிற்றுக்கை, ஆயிரம் கை, பதினாயிரம் கை, நூறாயிரம்கை என ஒன்று முதல் நூறாயிரம் வரை எண்கள் குறிக்கப்பட்டுள்ளன (3, வரி 34-43) .

மேற்கோள் : பிற அகப்பொருள் நூல்களில் உள்ள வாறே பரிபாடலிலும் திருக்குறள் போன்ற நூல்களின் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் சிலவற்றைக் கீழே காண்க :

1. வென் வேலான் குன்று 9-68.

 வென் வேலான் குன்று-கலித்தொகை 93 ,


2.காமக் கணிச்சி 10-33

'காமக் கணிச்சி யுடைக்கு கிறையென்னு

காணுத்தாழ் வீழ்ந்த கதவு -குறள் 1251


3. இல்லது நோக்கி விளிவரவு கூறாமுன் - கல்லது வெஃகி வினைசெய்வார் 10, வரி 87-88

'இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலனுடையவன் கண்ணே யுள'- குறள் 223