பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர்.மா.இராசமாணிக்கனார்

281


அரசனிடம் பல படைகள் இருக்கும். அவற்றுள் முதல் படை கூளிப்படை எனப்படும். அது பகைப்புலத்தைச் சூறையாடும்; தனக்குப் பின் வரும் படைக்கு ஒழுங்கான வழியை அமைத்துக்கொண்டு போகும். அதற்குப் பின்னரே, புலித் தோலால் செய்த உறையில் வாளைச் செருகியுள்ள வாட் படை வீரரும் வேற்படை வீரரும் பிற படை வீரரும் அணி வகுத்துச் செல்வர் (19) .

கூளிப்படையை அடுத்துச் செல்லும் படை தார் அல்லது தூசிப்படை எனப்படும். இப்படை வீரர் மன எழுச்சியுடன் போரிடுவர்; பகைவர் ஊர்களுக்கு எரியூட்டுவர்; பகைவர் நாட்டைக் குழப்பத்தில் ஆழ்த்துவர் (28) .

சமவெளியில் போரிடும் வீரர் தும்பைப்பூ மாலையைச் சூடுவர். மன்னன் பொன்னால் செய்த தும்பைப்பூ மாலையைச் சூடுவான் (45). கோட்டையை முற்றுகை இடுவதாயின் மன்னன் பொன்னால் செய்த உழிஞைப்பூ மாலையைச் சூடுவான். அவன் வீரர் உழிஞைப் பூக்களால் ஆகிய அழகிய மாலையைச் சூடுவர் (22).

உழிஞைப் போர் : படையெடுத்துச் செல்லும் வீரர் கோட்டைக்கு வெளியிலுள்ள காவற்காட்டை அழிப்பர்; பின்பு அதனை அடுத்துக் கோட்டையைச் சூழ உள்ள அகழியைக் கடப்பர். இவ்வொவ்வொரு முயற்சியிலும் கோட்டைக்கு உரியவர் எதிர்த்து நிற்பர். படையெடுக்கும் வீரர் அவர்களை வென்று மதில்மேல் ஏறுவர். பகைவர் எளிதில் ஏறிவர முடியாதபடி அம்மதிற்சுவர் வளைந்து வளைந்து செல்லும் நிலையில் அமைக்கப்பட்டிருக்கும். (53). அங்கு மதில் போர் நடக்கும்; மதிற்போரில் வெற்றி பெற்றவுடன் உழிஞை வீரர் அகநகர்க்குள் புகுவர்; அங்குத் தம்மை எதிர்த்த வீரரை அழித்து நகர்க்கு எரியிடுவர்; நகரைச் சூறையாடுவர் (20) .

கோட்டை வாயிலில் பகைவரை மகளிர் போல உருவ மைத்து அவர் அணிந்துகொள்வதற்குச் சிலம்பும் தழையும்