பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



314

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

கொண்டே கூறியுள்ளார். கி. பி. 13ஆம் நூற்றாண்டினரான பவணந்தி முனிவர்க்குப் பிற்பட்டவரான (கி. பி. 13அல்லது 14ஆம் நூற்றாண்டினரான) பேராசிரியர்' இத்தொகுதியைப் பாட்டு (செய்யுளியல் நூற்பா 50, 80 உரை) என்றே குறித்துள்ளார். இதனை நோக்க, இப் பாடல்கள் இளம்பூரணருக்குப் பின்பும் பேராசிரியர்க்கு முன்பும் தொகுக்கப்பட்டன என்பது தெரிகிறது. ஆயின், அப்பொழுதும் இத்தொகுதிக்குப் பத்துப் பாட்டு’ என்னும் பெயர் அமையவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்,மயிலைநாதர்என்பவர் நன்னூலுக்கு உரை வரைந்தவர். இவர் கி.பி. 14-ஆம் நூற்றாண்டிற்குப்பிற்பட்டவர்.' இவரே நன்னூல் நூற்பா 387 இன் உரையில் பத்துப்பாட்டு’ என்று முதன் முதலாகக் கூறியுள்ளார். ஆதலின், பேராசிரியர்க்குப் (கி. பி. 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டிற்குப்) பின்பே இத்தொகுதிக்குப் பத்துப்பாட்டு என்று பெயர் வழங்கலாயிற்று என்று கொள்வது பொருத்தமாகும்.'


11. பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் இளம்பூரணர் உரையை ஏடுகளிற்கண்டு, இளம்பூரணர் 'பத்துப் பாட்டு' என்று கூறவில்லை என்று குறித்துள்ளார்கள். ஆயின் அச்சிடப்பட்ட நூல்களில் செய்யுளியல் நூற்பா 150இன் உரையில் 'பத்துப் பாட்டு' என்பது காணப்படுகிறது. இவருக்குப்பின் வந்த பேராசிரியர் 'பாட்டு' என்றே பல இடங்களில் குறித்துள்ளார். தமக்கு முற்பட்ட இளம்பூரணர் பத்துப் பாட்டு என்று குறித்திருப்பாராயின், பின் வந்த பேராசிரியர் அதனையே குறித்திருத்தல் இயற்கை யன்றோ? எனவே, இளம்பூரணர் பத்துப்பாட்டு’ என்று குறிக்கவில்லை என்பதே உண்மையாகும்.

12. கலைக்களஞ்சியம், தொகுதி 7, பக். 631, 13. கலைக்களஞ்சியம், தொகுதி 8, பக். 106. 14. இலக்கிய தீபம், பக். 40; பத்துப்பாட்டிற்கு இலக்கணம் கூறும் பன்னிரு பாட்டியல் கி. பி. 14 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதென்னலாம்.