பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

341


வில்லையே! அதனால் சிலப்பதிகாரம் தமிழ் நூல்கள் அனைத்திற்கும் காலத்தாற் பிற்பட்டது என்று கூறுதல் பொருந்துமா?

6 கண்ணகியால் குறிக்கப்பட்ட பத்தினிப் பெண்கள் பிற தொகை நூல்களில் இடம் பெறவில்லை என்பது உண்மையே. இன்றும் நம்நாட்டில் அறிவிலும் ஒழுக்கத்திலும் உயர்ந்தவர் பலர் உளர். எவரேனும் ஒருவர் அவர்களைப் பற்றிக் கூறினால் அல்லது எழுதினால் மட்டுமே அவர்களைப் பற்றிப் பிறர் அறிய வாய்ப்பு உண்டாகும். அவர்களை நேரில் அறியாதவர்கள் அவர்களைப் பற்றிப் பேசவோ, பாடவோ வாய்ப்பு உண்டாவதில்லை. இங்ங்னமே கண்ணகியால் அறியப்பட்ட பத்தினிப் பெண்டிர் பிறர்க்குத் தெரியாதிருக்கலாம். அவள் குறித்த அறுவருள் ஆதிமந்தி பற்றிய செய்தி பரணராலும் வெள்ளி வீதியாராலும் (அகம் 45) பல பாடல்களில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆதிமந்தி பரணர் ஒருவராலேயே பல செய்யுட்களில் பேசப்பட்டுள்ளாள் (அகம்-76, 222, 236, 376, 396). கரிகாலன் முன்னிலையில் கழாஅர்த்துறையில் நடனமாடியபோது அவள் கணவன் ஆற்று நீாரல் இழுத்துச் செல்லப் பெற்றான் என்று பரணர் குறித்துள்ளார். அந்த ஆதிமந்தி வரலாற்றையே அவளது பெயர் கூறாமல் செயலை மட்டும் கூறி, அவள் கரிகாலன் மகள் என்று இளங்கோவடிகள் வஞ்சினமாலையில் (வரி 11-15) கூறியுள்ளார்.

புலவர் சிலர் கூறாது விட்ட உறவுமுறையை அவர் காலத்துப் புலவரோ பிற்காலப் புலவரோ குறிப்பது தவறன்றே! மேலும் கரிகாலனை அடுத்து வாழ்ந்தவர் இளங்கோ அடிகள். அவர் ‘சேர அரசமரபினர். அவரே, சேர அரச மகன் (வஞ்சிக்கோன்) ஒருவன் மனைவியே கரி காலன் மகள்’ என்று கூறித் தொகைநூற் பாடல்களிற் கூறப்பட்டுள்ள ஆதிமந்தியின் கற்பின் திறத்தைக் கூறியுள்ளார். எனவே, அவரால் குறிக்கப்பட்டது ஆதிமந்தி வரலாறு என்று கோடலே பொருத்தமுடையது.