பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா இராசமாணிக்கனார் 岱阻

  • கூடலார் புலனாவிற் பிறந்தசொற் புதிது" என்பது வேண்டாததாகும்."

5. கலித்தொகை 68-ஆம் செய்யுளில், 'மதிமொழி யிடல்மாலை வினைவர்போல் வல்லவர் செதுமொழி சித்த செவிசெறு வாக முதுமொழி நீராப் புலனா வுழவர் புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர' என்று பாண்டியன் குறிக்கப்பிடல் காணலாம். இதன்கண் பேரரசனுக்கு அமைச்சனைப் போல நூல்வல்ல ஆசிரியர் பலர் மதுரைக்கண் இருந்தனர் என்றும், அவரது செவி செய்யாகவும். சான்றோர் செய்யுட்கள் நீராகவும், அவர்தம் நா ஏராகவும் கொண்டு புலமுழுதுழும் புலவரென்றும், அவர் புதிய புதிய கவிகளை மிகுதியாக உண்டாக்குபவரென்றும், அச்செய்யுள் வளத்தைக் கொள்ளைக் கொண்டு உண்டது மதுரை என்றும் கூறியது காணலாம்."

6. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், .

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவனாக வுலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற் புலவர் பாடாது வரைகளின் னிலவரை." என்று வஞ்சினங் கூறினான் என்று புறநானூற்றுப் பாடல் (76) கூறுகின்றது. இக்கூற்றிலிருந்து, அவனைச் சார்ந்து புலவர் பலர் இருந்தனர் என்பதும், அவர் அனைவர்க்கும் மாங்குடிமருதன் என்பவர் தலைவராய் விளங்கினார் என்பதும் தெளியலாம். இதனால், பாண்டியன் அணைப்பில் புலவர் பலர், ஒரு புலவர் பெருமான் தலைமையில் ஒத்து வாழ்ந்தனர் என்பது இனிதின் உணரலாம்.

9. தமிழ் வரலாறு. பக். 49. 10. தமிழ் வரலாறு, பக், 42.