பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

7. சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகள்,

"புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பிற் பொதியிற் றென்றல் போலா தீங்கு மதுரைத் தென்றல் வந்தது காணீர்"11

என்று கூறியிருத்தல் காணத்தகும் பொதியில் தென்றலை விட மதுரைத் தென்றலுக்குள்ள சிறப்பு. புலவர் செந்நாப் பொருந்திய ஏற்றம் என்பது இளங்கோவடிகள் கருத்து. சங்கப் புலவரது செந்நாவாலே புகழப்பட்ட இச்சிறப்பு களையுடைத்தாகலிற் பொதியில் தென்றல் தன்னை ஒவ்வா மைக்குக் காரணமாகி இந்த மதுரைத் தென்றல் வந்தது, என இவ்வரிகளுக்கு அடியார்க்கு நல்லார் தரும் விளக்கம் காண்க .*

8. இங்ஙனம் மதுரையில் தமிழ் வளர்ந்த சிறப்பை, நோக்கியே, மணிமேகலை ஆசிரியரும்.

'தென்தமிழ் மதுரை 'என்றனர்.

"தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம் நின்று நிலைஇப் புகழ்பூத்தலல்லது குன்றுதல் உண்டோ மதுரை "

என வரும் பரிபாடல் அடிகள் இங்குக் கருதத்தகும். 'தமிழ் நாட்டு அகமெல்லாம் தண்டமிழுக்கு வேலியாய் நின்று நிலைபெற்ற மதுரை புகழ் பூத்தலல்லது குன்றுத லுண்டோ என்று கூறும் இவ்வடிகள், தமிழ்நாட்டுத் தமிழ்ப் பயிர் வளர மதுரை வேலியாய் அமைந்தது - தமிழ்,

11. புறஞ்சேரி, வரி. 130-132.

12. தமிழ் வரலாறு, பக். 51-52, 18. காதை 25, வரி 181.

14. பரிபாடல், மதுரை, 3.