பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63


மொழிக்குப் பெருங்காப்பாய் அமைந்தது எனப் பொருள் படல் காண்க." -

புலவர்கள். 'தமிழ்கெழு கூடல்' என்று மதுரையைப் போற்றிப் புகழ்ந்தாற் போலவே, மதுரையில் பாயும் வையை யாற்றையும் தமிழ் வையை' என்று பாராட்டினர்.

இவ்வாறு மதுரைக்கும் தமிழுக்கும் தொடர்பு கூறும் சங்கச் செய்யுள் அடிகளைப் போலச் சோழர் நகரத்திற்கோ, சேரர் நகரத்திற்கோ தமிழ்த் தொடர்பான குறிப்பு ஒன்றேனும் வாராதிருத்தல் நோக்கத்தகும். இஃது ஒன்றே, மதுரை தமிழ் வளர்த்த சிறப்புடையது என்பதை விளக்கப் போதிய சான்றாகும். எனவே, மதுரையில் பாண்டியரால் சங்கம் நிறுவப் பெற்றிருந்தது-அதனில் புலவர் தமிழ் வளர்த்தனர் என்பன நன்கு துணியப்படும். இவ்வுண்மையை, இலண்டன் பொருட்காட்சிச் சாலையிலுள்ள சின்னமனூர்ச் செப்பேடுகளில் காணப்படும்,

'மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ ’ எனவரும் அடிகளும் மெய்ப்பிக்கின்றன.

'சங்கம்’ என்னும் பெயர் இதுகாறும் கூறப்பெற்ற இலக்கியச் சான்றுகளை நோக்க, மதுரையில் கலைக்கழகம் ஒன்று இருந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்கும் உண்மையாகும். ஆயின், சங்கம்' என்னும் சொல் பழம் பாக்களில் இல்லாமை கவனிக்கத்தகும். அப்பெயர், தொகை நூல்ககளுக்கும் பின்னரே உண்டாகி, அப்பர் காலத்தில் வழக்கிற்கு வந்திருத்தல் கூடும் என்று கருதுதல் பொருத்தமாகும்.

கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் மதுரையில் வச்சிரநந்தி என்ற சமணப் பெரியார் தலைமையில் திகம்பர சமணர் சங்கம் ஒன்று கூடியது. சங்கம் என்ற சொல் மிகுதியாகப்

15. தமிழ் வரலாறு, பக். 52-3. 16. பரிபாடல் , வரி 60 .

17, Dr. Meenakshi–Aaministation B. social Life:

under the Pallavas, p. 227.