பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

மையே மெளரியர் படையெடுப்பைத் தடுத்து நிறுத்தியது. என்று கூறலாம்." இப்படையெடுப்பைப் பற்றிச் சங்கப் பாடல்களில் குறிப்புகள் வந்துள்ளன :

பிந்துசாரன் மகனான அசோகன் கி.மு 273 முதல் 232 வரையில் அரசாண்டான். அவனது ஆட்சியில் கலிங்க நாடு சேர்ந்தது. அவன் தமிழகம் நீங்கலாக உள்ள இந்தியா முழுமையும் அரசாண்டான். அம்மன்னன் கலிங்கப் போருக்குப் பின்பு பெளத்த சமயத்தைத் தழுவினான்; பெளத்த சமயக் கொள்கைகளைக் கற்றூண்களிலும் பாறை களிலும் குறிக்கும்படி செய்தான். அக்கல்வெட்டுகள் வடக்கே இமயமலை முதல் தெற்கே மைசூர் வரையில் பரவி யுள்ளன. அவற்றுள் இரண்டு கல்வெட்டுகளில் தமிழகத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன: சேர சோழ பாண்டிய நாடுகளில் பெளத்த சமயப் பிரசாரகரை அனுப்பிய தாகவும் மருத்துவ வசதியளிக்க உதவி செய்ததாகவும் அக் கல்வெட்டுகளில் அசோகன் குறித்துள்ளான்." அவனது பெருமுயற்சியால் ஈழநாட்டிலும் பெளத்த சமயம் பரவியது.??

25. History of India, vol. i. p. 122; sn't Gousosit தமிழரசர் ஒற்றுமையை உடைத்ததாகக் கூறும் கல்வெட்டின் காலம் கி.பி 165. தமிழரசர் கூட்டணி 113 ஆண்டுகளாக யிருந்துவந்தது என்று காரவேலன் குறித்துள் ளான்; அதாவது கி.மு 278 இல் அக்கூட்டணி ஏற்பட்ட தென்பது பொருள். பிந்துசாரன் ஆட்சிக் காலம் கி.மு. ஐ01.278, எனவே, இக்கூட்டணிக்குக் காரணம் பிந்துசாரன் மேற்கொண்ட மோரியர் படையெடுப்பேயாகும் என்று கூறுவது பொருத்தமாகும்.

26. அகநானூறு, 251, 281 புறநானூறு, 175: செந்தமிழ்ச் செல்வி vol. 15, பக். 546-5 54; vol. 16, pp. 117–119.

27. History of Ceylon, vol. I, part I. p. 47.

28. R. Sathyanatha Aiyar, History of India,

- §

vol I, p. 170.