பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

தமிழ்மொழி-இலக்கிய வரலாறு
   இங்ஙனம் சங்க காலத்தில் இலங்கைக்கும் தமிழகத்துக்கும் அரசியலிலும் வாணிகத்திலும் உறவு இருந்த காரணத்தாற்றான் இலங்கைத் தமிழ்ப்புலவர் ஒருவர் தமிழகத்திற்கு வந்து தமிழிற் சில பாக்களைப் பாடினார். அவர் பெயர் ஈழத்துப் பூதன் தேவனார் என்பது. அவர் பாடிய பாக்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை என்னும் தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன.

51. அகநானூறு, 88, 231, 307; குறுந்தொகை, 189, 343, 360; நற்றிணை, 366.