பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/132

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

128



பெண் இரண்டிற்கும் பொதுவான பெயர் எருமை என்பதே. மாட்டில் இந்த எருமையல்லாத மற்றொரு பிரிவு உள்ளதல்லவா? எல்லோராலும் எருமையினும் சிறந்ததாகக் கொண்டாடப்படும் அந்தப் பிரிவு மாட்டுக்கு உரிய பெயர் என்ன? இது சிலருக்குப் புரியாத புதிராகும். அந்தப் பிரிவைச் சேர்ந்த பெண் மாட்டிற்குப் ‘பசு’ என்றும், ஆண் மாட்டிற்குக் ‘காளை’ என்றும் சொல்கிறார்களே தவிர, அந்தப் பசு மாடு—காளைமாடு ஆகிய இரண்டிற்கும் பொதுவான பெயர் என்ன என்றால் சிலரால் சொல்ல முடியவில்லை. இன்னொரு பிரிவுக்கு எருமை என்பது பொதுப் பெயராயிருப்பதுபோல, இந்தப் பிரிவுக்குப் ‘பசு’ என்பதுதான் பொதுப்பெயராகும். பசு என்பது சிலர் எண்ணுவதுபோல் பெண்மாட்டுக்கு மட்டும் உரியதன்று; ஆண் மாட்டுக்கும் உரியதாகும். எனவே, ஆண் எருமை—பெண் எருமை என்று சொல்வது போல, ஆண் பசு—பெண் பசு என்றும் சொல்லலாம். ஆனால் ஆண்பசு என்று சொல்லும் வழக்கம் இக்காலத்தில் அருகிவிட்டது என்னவோ உண்மைதான்! இருப்பினும் அங்ஙனம் கூறுவதில் தவறொன்றும் இல்லை. இக்கருத்துக்கு,

[பசுவின் பொதுப் பெயர்]

“ஆவும், பெற்றமும், பசுவும், ஆனும்,
கோவும், குரால் தேனும் பசுச்சாதிப் பொதுப்பெயர்.”

[பெண் பசுவின் பெயர்]

“சுரபி, தேனு, சுரை, கபிலை, சேதா,
குரமே, கோமளம், பெண்பால் மேன.”