பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/152

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

148



இத்தொகுதியில் பொன்னைக் குறிக்க முப்பத்தெட்டுப் பெயர்களும், சோற்றுக்கு இருபத்து நான்கு பெயர்களும், உண்ணும் செயலுக்குப் பதின்மூன்று பெயர்களும், கள்ளுக்கு நாற்பத்தெட்டுப் பெயர்களும் கூறப்பட்டுள்ளன. மாதிரிக்காக, சோற்றுக்கும் உண்ணல் தொழிலுக்கும் உரிய பெயர்களை மட்டும் பார்ப்போம்:

(சோற்றின் பெயர்)

“புன்கம், மிதவை, பொம்மல், போனகம்,
அன்னம், ஓதனம், அயினி, அடிசில்,
பாளிதம், பொருகு, மிசை, பதம், பாத்து,
அமலை, உணவு, துப்பு, அசனம், கவுளம்,
சொன்றி, நிமிசம், மடை, கூழ், புழுக்கல்,
ஒன்றிய மூரல், சோறு என உரைப்பர்.”

(உண் தொழிலின் பெயர்)

“மிசைதல், பக்கித்தல்,
அயிலல், அனுங்கல், விழுங்கல், துய்த்தல்,
மேய்தல், அயிறல், நுகர்தல், அருந்தல்,
உண்டல், தின்றல், பருகுதல் என்றிவை
பண்பின் தொழிலைப் பகருங் கிளவி.”

மற்றும், பொதி சோறு, ஆற்றுணா. தோட்கோப்பு என்னும் சொற்கள் கட்டு சோற்றைக் குறிக்கும் பெயர்களாம்.

“பொதி சோறு ஆற்றுணா தோட்கோப்பு ஆகும்.”

பொதி என்றால் மூட்டை; எனவே, பொதி சோறு என்றால் கட்டு சோற்று மூட்டை என்று பொருளாம்.