பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/156

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

152



இந்தத் தொகுதியிலும் சேந்தன் பாராட்டப் பெற்றுள்ளான். சேந்தனைப் போன்ற வீரர்கள் காலில் கட்டிக் கொள்ளும் வீரக்கழலுக்குக் ‘காலணி வடம்’ என்று பெயர் என்று விளக்கும்முகத்தான் திவாகரர் சேந்தனைச் சிறப்பித்துள்ளார். பாடல்:–

“கெழுதகை அம்பல் கிழவோன் சேந்தனில்
விழைவுறு தியாகத்து வீரத்து விளக்கிய
கழலே ஆடவர் கால்மிசை யணிவடம்.”