167
மங்கையர் எழுவர் (சப்த கன்னியர்) ஆடுவது:—
“எழுவர் மங்கையர் ஆடலும் துடியே.”
காமன் (மன்மதன்) ஆடும் கூத்து:—
“பேடாடல் காமனது ஆடலாகும்.”
கைகோத்து ஆடும் கூத்து:—
“குரவைக் கூத்தே கைகோத் தாடல்.”
இருகை முடக்கி ஆடுங் கூத்து:—
“முடக்கிய இருகை பழுப்புடை ஒற்றித்
துடக்கிய நடையது துணங்கை யாகும்.”
முருகன் சாமி ஏறி ஆடுங் கூத்து:—
“அணங்கும், வெறியும், கழங்கும், வேலனாடல்.”
மேலுள்ள பாடல்களினல், கூத்தைக் குறிக்கும் பெயர்களையும், கூத்தின் வகைகளையும், அவரவர் ஆடும் கூத்துகட்குரிய தனித்தனிப் பெயர்களையும் அறியலாம். இதிலிருந்து தமிழருடைய கூத்துக் கலையின் ஆழமும் அகலமும் உயர்ச்சியும் புகழ்ச்சியும் நன்கு. புலனாகுமே!
அடுத்துச் சில சுவையான சொற்களைக் காண்பாம்:
அவித்தலைக் குறிக்கும் பாடல்:—
“நதுத்தலும் நொதுத்தலும் நுதுத்தலும் அவித்தல்.”
இப்பெயர்கள் சுவையாகவும் வேடிக்கையாகவும் உள்ளனவன்றோ? இரண்டு காலடிகளையும் கீழே