பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/171

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

167



மங்கையர் எழுவர் (சப்த கன்னியர்) ஆடுவது:—

“எழுவர் மங்கையர் ஆடலும் துடியே.”

காமன் (மன்மதன்) ஆடும் கூத்து:—

“பேடாடல் காமனது ஆடலாகும்.”

கைகோத்து ஆடும் கூத்து:—

“குரவைக் கூத்தே கைகோத் தாடல்.”

இருகை முடக்கி ஆடுங் கூத்து:—

“முடக்கிய இருகை பழுப்புடை ஒற்றித்
துடக்கிய நடையது துணங்கை யாகும்.”

முருகன் சாமி ஏறி ஆடுங் கூத்து:—

“அணங்கும், வெறியும், கழங்கும், வேலனாடல்.”

மேலுள்ள பாடல்களினல், கூத்தைக் குறிக்கும் பெயர்களையும், கூத்தின் வகைகளையும், அவரவர் ஆடும் கூத்துகட்குரிய தனித்தனிப் பெயர்களையும் அறியலாம். இதிலிருந்து தமிழருடைய கூத்துக் கலையின் ஆழமும் அகலமும் உயர்ச்சியும் புகழ்ச்சியும் நன்கு. புலனாகுமே!

அடுத்துச் சில சுவையான சொற்களைக் காண்பாம்:

அவித்தலைக் குறிக்கும் பாடல்:—

“நதுத்தலும் நொதுத்தலும் நுதுத்தலும் அவித்தல்.”

இப்பெயர்கள் சுவையாகவும் வேடிக்கையாகவும் உள்ளனவன்றோ? இரண்டு காலடிகளையும் கீழே