பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

238

ஒரு சிற்றரசன். அச்சோழ மன்னனது ஆட்சிக்காலம் கி. பி. 1178 முதல் 1216-ஆம் ஆண்டுவரையும் ஆகும். எனவே, சீயகங்கன் காலமும் பவணந்தியார் காலமும் அதே அல்லது அதைத் தொடர்ந்த காலம் என்பது புலனுகும். ஆகவே, கன்னூல் எழுந்த காலம் பதின் மூன்ரும் நூற்ருண்டின் முற்பகுதி எனலாம். நன்னூ லில் பிங்கலம் குறிப்பிடப்பட்டிருப்பதால் அதற்குப் பிற்பட்டது இது என்பதும் அறியற்பாற்று.

நூலின் அமைப்பு நன்னூல் நூற்பா (சூத்திர) கடையில் யாக்கப் பட்டுள்ளது. இப்போது உள்ள கன்னூலில் எழுத்ததி காரம், சொல்லதிகாரம் என இரு பகுதிகள் உள்ளன. இவற்றில் எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமும் சொல்லப்பட்டுள்ளன. ஆனல், கன்னூலில் எழுத்ததி' காரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், யாப்பதி காரம், அணியதிகாரம் என ஐந்து அதிகாரங்கள் இருந்ததாகவும், அவற்றில் எழுத்திலக்கணம், சொல் லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம் என்னும் ஐந்திலக்கணங்கள் சொல் லப்பட்டதாகவும் கன்னூல் உரையிலும் பெரிய திரு. மொழித் தனியனிலும் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனல், சைனர் சிலர், தொல்காப்பியம் போலவே நன்னூலும் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொரு ளதிகாரம் என்னும் மூன்று பிரிவுகளே உடையதென வும், பொருளதிகாரத்தில் தொல்காப்பியம் போலவே பொருளிலக்கணத்துடன் யாப்பிலக்கணமும் அணி யிலக்கணமும் இணைத்துச் சொல்லப்பட்டன எனவும் கூறுகின்றனர். எது உண்மையாயினும், முழு கன்னுர லும் நமக்குக் கிடைக்கவில்லை என்பதுவரைக்கும்

உறுதி.