இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
333
333
இனி நூலின் மாதிரிக்காகச் சில நூற்பாக்கள் வருமாறு:
விநாயகர் துதி
அருட்கடல் விநாயகன் அடியிணை யிறைஞ்சிப் பொருள்தொகை நிகண்டினைப் புகலுது மியாமே.”
ஒரு பொருள்
ஒருமை யாவது முத்திப் பேரும்
அஃதிறை யுணர்ந்துற லாமென மொழிப.”
(ஒன்று எனச் சிறப்பிக்கத் தக்கது வீடு பேறு)
இரு பொருள்
' அச்சுவினி தேவர் அவர் இருவோர் தமைத்
தேவ மருத்துவர் என்னச் செப்புவர்.”
(தேவ மருத்துவர் இருவர்=அச்சுவினிதேவர் எனப்படு வர்)
" அயனம் இரண்டு உத்தரம் தக்கிணமே.” (உத்தராயணம், தட்சிணுயணம் என அயனங்கள்
இரண்டாம்)
முப்பொருள்
'அயன் அரி அரன் மும் மூர்த்தியாமே.”
(மும்மூர்த்திகள் = அயன், அரி, அரன் என்பவர்கள்)
இப்படியாக ஒவ்வொரு தொகைப் பொருளும் விளக்கப்பட்டிருப்பதை நூலில் காணலாம். மேலே