பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368

368

பலவற்றின் பலன்களும், மற்றும் பல செய்திகளும் கூறப்பட்டுள்ளன. இங்கிகண்டின் மாதிரிக்காக, மேடத்தின் உருவமும் காரகமும் சொல்லப்பட்டுள்ள முதல் பாடல் வருமாறு :

“ மேடந்தான் மேடரூப மேயாகும்

மேவிடம் காடு நாற்காலாம் நீடிய தாதுவாகும் கீழ்த்திசையாம் நிறம் சிவப்பரசன் சாதியதாம் தேடிய ஆண்பால் நிலமகன் வீடாம்

திநகான் தனக்கு உச்சமாகும் வீடிய சநிக்கு நீசமாம் இரவில்

விழித்திடும் இராசியும் என்பார்.”

ஆட்டின் உருவமுடைய மேட ஒரையைப் (இராசி யைப்) பற்றிய செய்திகள் இப்பாடலில் இடம் பெற். றுள்ளன.

தில்லை காயகர் இயற்றிய இந்தக் கணி நூல் நிகண்டுகட்கு முன்னும் பின்னும் எத்தனையோ கணி நிகண்டுகள் தோன்றின. பெரும்பாலானவற்றை நாம்

இழந்துவிட்டோம்.

அரும்பெருங் கலைச் செல்வங்கள் தோன்றி மறைய இனியும் இடந்தராமல் தமிழ் மக்கள் விழிப்பெய்து வாராக!