பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452

452

தனித்துப் பிரித்தெடுத்து எழுதுவார்கள்; பின்னர், அணில் என்னும் சொல்லிலிருந்து 'அ' என்னும் எழுத் தைத் தனித்துப் பிரித்தெடுத்து எழுதிக் காட்டு வார்கள் - சொல்லவும் செய்வார்கள். இது தான் இயற் கைக்கு உகந்த உள்நூல் முறையாகும்.

இந்தக் காலத்தில் என்றென்ன? அந்தக் காலத்தி லேயேகூட, தமிழ்நாட்டு மாண்டிசரி' என்று சிறப்பிக் கத் தக்க ஒளவைப் பிராட்டியார், 'அறஞ் செய் விரும்பு' என்னும் வாக்கியத்தின் வாயிலாக 'அ' என் னும் எழுத்தையும், ஆறுவது சினம்' என்னும் வாக்கி யத்தின் வாயிலாக 'ஆ' என்னும் எழுத்தையும், இன் னும் இ, ஈ முதலிய மற்ற எழுத்துக்களையும் 'இயல்வது கரவேல்', 'ஈவது விலக்கேல்' முதலிய மற்ற வாக்கியங் களின் வாயிலாகவும் தமிழ்க் குழந்தைகட்கு அறிமுகப் படுத்தி வைத்திருக்கிறார் அல்லவா? அதனையும் ஈண்டு

ஒப்பு நோக்குக.

இதுகாறுங் கூறியவற்றிலிருந்து, சொல்லுக்கு முந்தியது சொற்றொடரே என்னும் கருத்து தெள்ளத் தெளிவாகும். அங்ஙனமெனில், தொடக்க காலத்து மக்கள் ஏதோ வாய்க்கு வந்தபடி உளறிய ஒலித் தொடரிலிருந்தே தனித் தனிச் சொற்கள் பிரிக்கப்பட்ட டன் என்னும் முடிவுக்கு வரவேண்டும்.

இந்தக் கருத்து பலருக்குச் செரிமானம் ஆகாது தான்! ஆராய்ச்சிக் கண் கொண்டு கூர்ந்து நோக்கு வோரே இதனைச் செரிக்கச் செய்துகொள்ள முடியும்.

இந்தக் கருத்தை மறுப்போர் பின்வருமாறு கூறக் கூடும் :-" மக்கள் முதலில் ஒவ்வொரு பொருளையும்