பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/507

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

503

503

என்று கேட்டால், இது சொல்லத் தெரியவில்லையே அவருக்கு' என்று எளிய மக்கள் எளிதில் உதட்டைப் பிதுக்கிவிடுவார்கள்.

எடுத்துக் காட்டாக, - தமிழ் படித்தவர் என்ற பெயருடன் ஒருவர் ஒரு சிற்றூரில் சென்று அகப் பட்டுக் கொண்டால், ஆங்கிருக்கும் சிலர் கேட்கும் கேள்விக்கட்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும்; அவர்கட்கு எழும் ஐயந்திரிபுகளையெல்லாம் தெளிவிக்க வேண்டும். இலக்கண இலக்கியங்கள் பற்றி மட்டும் கேட்டால் ஓரளவு தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், கணிதம், மருத்துவம், வானநூல், தத்துவம் முதலிய கலைகள் பற்றித் தமிழ் மொழியில் செய்யுள் நூற்கள் பல உள்ளன. இக் கலை நூற்கள் தொடர்பாகச் சில தொண்டு கிழங்கள் கேள்வி கேட்கத் தொடங்கி விடும். இங்கே மொழியில் முழுப் புலமை பெற்றவர் களே ஓரளவேனும் தாக்குப் பிடிக்க முடியும். அல்லாதவர் பதமாக நழுவிவிட வேண்டியதுதான்!

தமிழ்மொழியில் வல்லவர்கள் என்றால், அம்மொழி யில் எழுதப்பட்டுள்ள அனைத்துக் கலை நூற்களையும் புரிந்து கொள்ளத்தக்கவர்கள் என்று பொருள் கொள்ளும் நிலை பத்தொன்பதாவது நூற்றாண்டு வரையும் இருந்தது. ஆனால் இப்போது.........?

ஒவ்வொரு மொழியிலும் இல்லாத கலைகள் பல புதிதாகப் புகுந்திருக்கும் இந்த இருபதாம் நூற்றாண் டிலே - ஒவ்வொரு மொழியிலும் ஏற்கனவே இருந்த கலைகளும் இன்னும் ஆழ்ந்து அகன்று பெருகியிருக்கும்

இந்த இருபதாம் நூற்றாண்டிலே, ஒருவர் ஒரு மொழியில் லுள்ள எல்லாக் கலை நூற்களையும் கற்பதென்பதும்