பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/80

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

76



வேண்டுகோட்படி திவாகரர் என்பவரால் இயற்றப்பட்ட தாதலின், இயற்றுவித்தோன் பெயரையும் இயற்றியவர் பெயரையும் இணைத்துச் சேந்தன் திவாகரம் என அழைக்கப்பட்டது. இந்தத் திவாகரருக்கு முன்னாலேயே இன்னொரு திவாகரர் தம் பெயரால் ‘திவாகரம்’ என ஒரு நிகண்டு இயற்றியிருந்தார். இப்படியாக இரண்டு திவாகரங்கள் தோன்றிவிடவே, இரண்டிற்கும் வேறுபாடு தெரிவதற்காக, முதலில் தோன்றிய திவாகரம் ‘ஆதி திவாகரம்’ எனவும், சேந்தனது தூண்டுதலால் இரண்டாவதாகத் தோன்றிய திவாகரம் ‘சேந்தன் திவாகரம்’ எனவும் அழைக்கப்பட்டன. ஆனால் எப்படியோ ஆதி திவாகரம் அழிந்து போயிற்று.

சிலர், இந்த இரு திவாகரங்களையும் தனித் தனி நூலாகக் கொள்ளாமல், ஒரே நிகண்டெனக் கூறுகின்றனர். இவர் கூற்றுப் பொருத்தமுடையதாகப் புலப்படவில்லை. இது குறித்துச் ‘சேந்தன் திவாகரம்’ என்னும் தனித் தலைப்பில் விரிவாக ஆராயப்படும்; அதனை அடுத்து வரும் இரண்டாம் பாகத்தின் தொடக்கத்திலேயே காணலாம்.