இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
158 தமிழ் அங்காடி
- தனித்தும் இயங்கும் தகைசால் பெருமிதம்,
- இனித்திடு மொழிபல ஈன்றும் கன்னிமை,
- இலக்கிய இலக்கண இயல், இசை, கூத்தெனும்
- துலக்குறு மூவகை துன்னிய பெருவளம்,
- கணக்கில் கலைவளம், கலைக்கழ கங்கள்,
- மணக்கும் கூடலாம் மதுரையின் மாப்புகழ்
- ஆய்வுமன் றங்கள், அரும்பெரும் படைப்புகள்,
- தாய்மொழி தனக்காத் தம்முயி ருந்தரும்
- வாய்மைப் புலவரும் வள்ளலும் மன்னரும்
- சேய்களாய் மன்னிய செல்வச் செழுமை,
- இன்னன பிறவும் இன்றமிழ்த் தாய்க்கு
- மன்னிய தலைமை மகுடமாய்த் திகழுமால்!
- தலைவி வினவல் நல்லது,
- இன்னவை யாவும் இன்றமிழ்த் தாய்க்கு
- மன்னிய மகுட மாமா றுணர்த்துமின்!
- தலைவன் கூறல் சரி, கேண்மதி!
' '[தமிழின் தொன்மை]
- முட்டையோ புள்ளோ முதல தென்று
- திட்டமா யுரைக்கத் தெரியா தாயினும்
- மன்னி முதன்முதல் மக்கள் பேசிய
- கன்னி மொழிநங் கன்னித் தமிழே!
- மன்பதைத் தோற்றம் மாதமிழ் நிலத்திலே
- என்பதை யுரைக்கின் இறும்பூ தென்ன!
- நன்று சான்றும் நவிலுவன் மாதோ!
- அமெரிக் காவிலோ ஐரோப் பாவிலோ
- ஆஃபிரிக் காவிலோ ஆத்திரே லியாவிலோ
- மக்கள் நெருக்கம் மண்டி யிருப்பது?
- தக்க ஆசியத் தரையிலே யன்றோ?
- எப்பொருள் மிகமிக எவ்வழி யிருக்குமோ
- அப்பொருள் தோற்றம் அவணே என்றான்.