இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
160 தமிழ் அங்காடி
- பாமர நிலையில் பல்பொருட் கிட்டனர்
- அதாஅன்று,
- பிறிது நாடுபல பிறக்கு முன்பே
- அறிவுக் கெட்டா ஐயா யிரமேற்
- செறியும் ஆண்டாய்ச் செந்தமிழ்த் தேமொழி
- இயலிசை கூத்துகள் இன்னபிற பெற்று
- வயங்குவ துலக வரலா றன்றோ?
- எனவே,
- தொன்மை தமிழ்க்குத் தொலைவில் மகுடமாம்
மென்மை
- இம்மா வுலகில் எதற்கு மிலாத
- மென்மையும் இனிமையும் மேவிய ஒலிநயம
- தொன்மையைத் தமிழ்க்குத் துளக்கும் காட்டாம்.
- மென்மை யன்றி மென்சிறார் பேச்சில்
- வன்மை தோன்ற வழிதா னுண்டோ?
- தமிழ்மொழி முதன்முதல் தரணியில் பேசிய
- அமிழ்தத் தமிழரும் அவர்க்கொப் பன்றோ?
இனிமை
- அமிழ்தெனும் ஒலியுடன் அமைந்த இனிமையே
- தமிழ்ச்சிறப் பிற்குத் தன்னிகர் கரியால்!
- தானறி மொழிகளுள் தமிழ்க்கிணை யிலையெனும்
- ஊனமில் உண்மையை உரைத்தான் ஒருகவி.
- பன்மொழி யினுமிலாப் பாங்குறு ‘ழ'வ்வொலி
- நம்மொழி யுற்றது தனிசிறப் பாமே!
- வண்டமிழ்ச் சுவைநுகர் வாய்ப்பிலா தோரே
- அண்டமும் வீடும் அவாவித் திரிவர்.
- உனது மொழிப்பெயர் ஒருவர் வினவின்
- 'இனிமை' என்றுநீ இயம்பலாம் தடையிலை.
- கன்னல் சுவையினைக் கழறுவா யென்றிடின்