இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
286 தமிழ் அங்காடி
கூலக் கடைத் தெருவில் துலாக்கோலுடனும் மரக்காலுடனும் தரகர் திரிவர். மிளகு, பாக்கு முதலியவற்றின் பொதிகள் மண்டிக்கிடக்கும். பதினாறு வகைக் கூலங்கள் விற்கப்படும்.
இவ்வாறாகப் பண்டைக் காலத்தில் தமிழகத்தில் நடைபெற்ற அங்காடி வாணிக வளத்தை நோக்குங்கால் பெரு வியப்பு தோன்றுகிறது. வளர்க தமிழ் அங்காடி.
—☆—