சுந்தர சண்முகனார் 75
மற்றும் கூறுகிறாள: நீங்கள் அரிந்ததின் காரணமும் தெரிகிறது. மூக்கு இல்லையெனில் வேறுயாரும் இவளை விரும்பார்; இவள் நம் பக்கத்திலேயே இருப்பாள் என்று எண்ணியே இவ்வாறு செய்ததாகக் கருதியே மகிழ்கிறேன். நீங்கள் பிழை செய்யவில்லை - நல்லதே செய்துள்ளீர்:
"பொன்னுருவப் பொரு கழலீர் புழை காண
மூக்கு அரிவான் பொருள்வே றுண்டோ
இன்னுருவம் இதுகொண்டு இங்கு இருந்தொழியும்
நம்மருங்கே, ஏகாள் அப்பால்,
பின்னிவளை அயல் ஒருவர் பாரார் என்றே
அரிந்தீர், பிழை செய்திரோ?
அன்னதனை அறிந்தன்றோ அன்பு இரட்டி
பூண்டது நான் அறிவிலேனோ!" (133)
புழை = துளை. அரிவான் பொருள் = அரிந்ததின் நோக்கம், நம் மருங்கு = நம் பக்கத்தில். பிழை செய்தீரோ என்பதன் இறுதியில் உள்ள 'ஓ’ எதிர்மறை - அதாவது, பிழை செய்யவில்லை என்பது கருத்து. என் மூக்கை அரிந்ததால் உங்கள் மேல் எனக்கு இரட்டிப்பு அன்பு ஏற்பட்டுள்ளது.
பாம்பின் கால்
அரக்கர் உம்மோடு போர் புரியின், யான் உங்கட்குத் துணையாய் நின்று அவர்களின் வஞ்சக மாயங்களை எல்லாம் உங்களுக்குக் காட்டிக் கொடுத்து உதவி புரிவேன்.
அரக்கரின் வஞ்சகத்தை யானே அறிவேன். 'பாம்பு அறியும் பாம்பின் கால்’ என்று உலகம் சொல்வதை நீங்கள் அறியீரோ
"பாம்பறியும் பாம்பின்கால் எனமொழியும்
பழமொழியைப் பார்க்கி லீரோ" (139)
என்பது பாடல் பகுதி. இந்தப் பகுதி முன்றுறை அரையனார் இயற்றிய 'பழமொழி நானூறு' என்னும் நூலிலுள்ள-