பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 (4) கr எனும் மொழிக்கு வாசனை, கலியாணம், புதும்ை, விளக்கம், மிகுதி, விளாவு, பூசை, சிறப்பு, கூர்மை, இன்பம், ஓசை,அச்சம், அதிசயம், தேற்றம், சந்தேகம், சகிப்பு, காலம், ருபாய், சிறு கொடி என்று இத்தனை அர்த்தங்கள் உள. (5) சாளம் என்னும் சொல்லுக்கு, பாதம், வேதப்பருதி அடைக்கலம். மருதநிலத்து நகரம், வீடு, அரசு, மயிற்ருேகை, மயில்: பெருங்காயம், முதலிய பல அர்த்தங்கள் உள. இப்படிப்பட்ட உதாரணங்கள் நூற்றுக்கணக்காக அகராதிகளில் காணலாம். இங்கு ஒரு மொழிக்கு ஒரே அர்த்தம் இருப்பதுதான் ல மென முதலில் தோன்றியபோதிலும், ஒரு பாஷையின் புஷ்டிக்கு இப் படியிருத்தல் நலமென்றே ஆயுங்கால் அறிவோம், முக்கியமாக தமிழ் பாஷையில் சிலேடை என்பதைத் கவிகளில் உபயோகிப்பதற்கு இது இன்றியமையாததாம். இவ்வாறில்லாவிட்டால் கலம்பகங்கள் முதலிய கிரந்தங்களின் சில அடிகள் பெரும்பாகம் குறைந்து போகுமன்ருே, நேர் விரோதமான அர்த்தங்களையுடைய தமிழ் மொழிகள் தமிழில் ஒன்றன்றிஒன்று சம்பந்தமில்லாத நேர் விரோதமான அர்த்தங்களையுடைய சிலமொழிகள் உள. அவற்றிற்கு உதாரணமாக: (1) எச்சம் என்ருல் பறவைகளின் மலத்துக்குய் பெயர்: ஓர் வாசனைப் பண்டத்திற்கும் பெயர் ! (2) எட்டன் என்ருல் அரசனுக்குத் தொழில் புரியும் மங்கலப் பாடாகனுக்கும் பெயர், மடையனுக்கும் பெயர் ! - (3) பணம் என்ருல் திரவியத்திற்கும் பெயர், பாம்பின் படத் திற்கும் பெயர். . . (4) காசம் என்ருல் அழகிய தாமரைக்குப் பெயர் மிகுந்த பயங்கரமான ஓர் வியாதிக்கும் பெயராம். (5) இரிட்டம் இது சுபத்திற்கும் அசுபத்திற்கும் உபயோகப் படுகிறது. . . . - .