இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வாணியின் காதல்
123
மன்னன் :-
இவையெல்லாம் யானறியேன் ; பிஞ் சில் பழுத்த பேச்சை விடு ; மிஞ்சாதே : தந்தை சொற்படி நட.
வாணி :-
அங்ஙனம் நடவாவிடின் ?
மன்னன் :-
என்றும் நீ கன்னியாயிருப்பாய்.
வாணி :-
சம்மதம்.
மன்னன் :-
கன்னியாயிருப்பாயின் உன் அழகு பாழாகும். அரைக்கில் அன்றாே சந்தனம் கமழும் ?
வாணி :-
அச்சந்தனக் கட்டையைக் கரையான்
அரித்தால் மணக்குமா ?மன்னன் :-
நீ பிடித்த முயலுக்கு மூன்றுகால்
என்று சாதித்தால் என் செய்வது ?வாணி :-
இப்பிடிவாதம் பெற்றாேரிடமிருந்தால்
பெண்கள் எவ்வாறு பிழைப்பர்?மன்னன் :-
சகடன் சொற்படி நாம் திரு மணத்தை நடத்துவோம். ஆயினும் உன் கருத்தையறிய ஐந்துநாள் தவணை கொடுக் கிறோம்.
வாணி :-
பெருமானே, யான் இறப்பதாயிருந் தாலும் இத்திருமணத்திற்கு இசையேன். யான் மறுத்துக் கூறிய அனைத்தும் பொறுத் தருள்க.