இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
124
தமிழ் இனம்
முடிவுரை
ஐந்து நாட்களுள் சேரனுக்கும் பாண்டியனுக்கும் போர் மூண்டது. சூழ்ச்சியை அரசன் உணர்ந்தான். தன் மகளான மனோன்மணி காதலித்த சேரநாட்டு மன்னனுக்கே தன் மகளைப் பாண்டியன் மணம் புரிவித்தான். அவ்வாறே, வாணியின் விருப்பப்படியே நடராசன் அவளுக்கு மணமகனானான். இப்பகுதியில் வாணியின் நுண்ணறிவும், களங்கமற்ற காதலின் உறுதியும் நன்கு அறிந்து மகிழ்தற்குரியனவாகும். காதல் பற்றிய அவளது அறிவுரை, நம் சமுதாயத்திலுள்ள பெற்றோர்களுக்கு நல்லறிவினைத் தருமா ?