பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் முறைமை 3●5 மண்ட லத்தை அணுஅணு வாக்கினால் வருவ தெத்தனை அத்தனை யோசனை கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை: கோல மேநினைக் காளியென் றேத்துவேன்' என்ற பாடலில் அற்புதமாக விளக்குவர். இங்குக் காளி இறைவியாகச் செயற்படுகின்றாள். இந்த விளக்கத்தில் அண்டங்களுக்கு இடையேயுள்ள தொலைவுகளையும் கற்பனைமூலம் கணக்கிட்டுக் காட்டுவர். புறமுக ஆற்றல் (Centrifugai force) என்ற இறைவனது ஆணையால் இக் கோள்கள், அண்டங்கள் வழிவிலகாமல் சுற்றி வந்து கொண் டிருக்கின்றன. ஒவ்வொரு கோள்கட்கும் இடையிலும் பல் லாயிரக் கணக்கான மைல் இடைவெளிகள் உள்ளன. இந்த இடைவெளியில்தான் சில சமயம் வால்மீன் களையும் (Comets) வீழ் கொள்ளி அல்லது எரிமீன்களையும் (Meteors) காண்கின்றோம். இங்ங்னம் அண்டங்கள் விண்வெளியில் வெவ்வேறு வேகத்தில் சுழன்று கொண்டும், ஒன்றையொன்று சுற்றிக் கொண் டு ம் உ ள் ள உ ண் ைம ைய ஆ ண் - வனின் அலகிலா விளையாட்டாகக் கொள்வர் திரிகூட ராசப்பக் கவிராயர், சாட்டைத்துணையின்றியே இத்தனை அண்டங்களையும் ஆண்டவன் பம்பரம்போல் ஆட்டி வைக்கின்றான் என்று காட்டுவார். சாட்டி நிற்கும் அண்டமெலாம் சாட்டையிலாப் பம்பரம்போல் ஆட்டு விக்கும் குற்றாலத்து அண்ணலார்’ என்று அழகாகக் குறிப்பிடுவதைக் கண்டு மகிழலாம். 21. பா. க : தோ.பா:மகாசக்தி வாழ்த்து. 22. குற்றாலக் குறவஞ்சி.107. த. இ. அ-20