பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

怨密{} தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை, یہسیہہ مسس۔سی۔سم ------ என்ற மூன்று நீதிகள் வலியுறுத்தப் பெறுகின்றன. ஊழ் கருத்து சந்தர்ப்பத்தை நோக்கிக் காவியத்தில் பல இடங் களிலும் காட்டப்படுகின்றன. இக்கருத்து மணிமேகலை யில் பல இடங்களிலும் தட்டுப்படுவதை அறிந்து மகிழலாம். காலச்சுருக்கம் கருதி அந்த இடங்களுக்குப் போகவில்லை. எனினும் பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் விதிபற்றிய கருத்துகள் அமைந்திருப்பதைச் கட்டுவேன். மண்டபம் சமைப்பதற்கும் அதன் திறப்பு விழாவிற்கு பாண்டவர்களை அழைப்பதற்கும், வரும்போது அவர் களைச் சூதில் ஈடுபடுத்துவதற்கும் திருதராட்டினன் இசைவு தராவிடில் துரியோதனன் தன் சிரம் கொய்து ஆவி இறுத்திடுவதாக அச்சுறுத்தியதும் கண்ணிலானும், அவற்றிற்கு ஒருப்படுகின்றான் - மிக்க வருத்தத்துடன், 'விதிசெய்யும் விளைவி னுக்கே -இங்கு வேறு செய்வார் புவிமீ துளரோ? மதிசெறி விதுரன் அன்றே-இது ந்திறன் அறிந்துமுன் எனக்குரைத்தான் அதிசயக் கொடுங் கோலம்-விளைந் தரசர்தங் குலத்தினை அழிக்கும்’ என்றான் சதிசெயத் தொடங்கி விட்டாய் - நின்றன் சதியினில் தான்.அது விளையும் என்றான். விதி:விதி விதி!மகனே-இனி வேறெது. சொல்லுவன் அட மகனே! கதியுறுங் கால னன்றோ-இந்தக் கயமகன் எனநினைச் சார்ந்து விட்டான் கொதியுறும் உளம் வேண்டா;-நின்றன் கொள்கை யின்படி அவர்தமை அழைப்பேன் வதியுறு மனை செல்வாய்;-என்று 4 G. Lifr. 字; 五97。五68.