பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை சொல்லால் சொல்லிக் கொள்ளலாம் எனவும், தந்தையும்: அண்ணனும் நெருங்கிய கேளிரேனும் ஆண்பாலார் ஆதலின் ஒரு குமரியின் களவினைக் குறிப்பால் உணரச் செய்தல் நல்லது எனவும் அகத்திணை இலக்கணம் வகுத்துக் காட்டும் மனப்படிகளின் நுட்பம் எண்ணி உணர்தற் பாலது. காமர்கடும்புனல் எனத்தொடங்கும் கலிப்பாட்டில் (கலி - 39; குறிஞ்சிக்கலி - 3) அறத்தொடு நிலையை நிகழ்ச்சி முறையால் வைத்துச் சிறுகதைபோல் வேகமா கச் சொல்லிச் செல்வதைக் கண்டு மகிழலாம். அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய். என்று அறத்தொடு நிற்கும் முறையினையும் சுட்டிக் காட் டியிருப்பது நோக்கத் தக்கது. அறத்தொடு நிற்றலின் நன்னோக்கம் சங்ககாலச் சான் றோர்களின் நெஞ்சைப் பிணித்துப் பல அரிய பாடல்களை உருவாக்கியுள்ளது. பிறவழிகள் யாவும் பயனற்றுப் போன பிறகு அறத்தொடு நிற்றல் என்னும் நேர்வழியைத் தலைவி யும் தோழியும் மேற்கொள்வர். நாணமும் கற்பும் உயிர னைய இருபேரொழுக்கங்களாகும்; ஒருவந்தம் காத்துப் போற்றத் தக்கவையுமாகும். ஆயினும், நாணை விட்டேனும் கற்பைத் தலையாகப் போற்றிக் காக்க வேண்டும் என்பது பண்டைத் தமிழர் கண்ட வாழ்க்கை நெறி. உயிரினும் சிறந்தன்று நானே நாணினும் செயிர் தீர்க் காட்சிக் கற்புச் சிறந்தன்று'. என்பது தொல்காப்பியம். நாணத்தைக் காக்க உயிர் விடுக; கற்பைக் காக்க நாணத்தை விடுக' என்று தெரிவிப் பர் தொல்காப்பியர். அறத்தொடு நிற்பது பெற்றோர்க்கு முன்னதாக இருப்பினும் நாணத்தை விட்டொழிக்க 22. களவியல்- 1 (ேஇளம்).