பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 3 I பரதாழ்வான் எங்ங்னம் மனக்கிலேசம் அடைந்தானோ அங்ங்னமே தோழி இப்போது துயர் அடைகின்றாள். இவ்வாறு சிந்திக்கின்றாள்; மானிடவர்க்கென்று பேச்சுப் படில் வாழகில்லேன்' என்று கூறியவள் இவள். அன் நிப்பின் மற்றொருவர்க்கென்னைப் பேசவொட்டேன் மாலிருஞ்சோலை மாயற்கல்லால்' என்ற பிடிவாதத் தைப் பிடிக்கின்றவள். மாறாக ஏதேனும் நடைபெற் றால் இவள் உயிர் தரியாள். அப்படி நடைபெறுவதை எப்படியாயினும் தடுத்தேயாக வேண்டும். அங்ங்னம் செய்ய முயலுங்கால் திருப்புலியூர் நாயனாருடன் புணர்ச்சி உண்டானமையை அறிவிப்பின் அஃது என் காவற் சோர் வாலே நிகழ்ந்தது என்று ஏற்பட்டுவிடும்; அறிவியாவது ஒழியில் இவள் வாழாள். இந்நிலையில் செய்ய வேண் டியது என்ன?’ என்பதாக. தோழி இங்ங்னம் சிந்தித்துக் கொண்டிருக்கும்பொழுது தலைவியின் பெற்றோரும் மற்றோரும் அவளுடைய வடிவ வேறுபாட்டிற்குக் காரணம் யாதானும் இருக்கு மோ என்று ஆராயும் நிலையைக் காண்கின்றாள். அந்த முறையைக் கூறுவதாக அமைந்ததே இத்திருவாய்மொழி. இதுவே அகப்பொருள் நூலார் குறிப்பிடும் அறத்தொடு கிற்றல்' என்பதாகும். இத்திருப்பதி எம்பெருமான்மீதுள்ள திருவாய்மொழி இதனையே கூறுகின்றது.* 26. நாச். திரு. 15 27. பெரியாழ். திரு 3.4:5 28. பத்துப்பாடல்களையுடைய தொகுப்பைப் பதிகம் என்று வழங்குவது தமிழ்மரபு. சைவ இலக்கியங்கள் இப்படியே வழங்குகின்றன. நம்மாழ்வாரின் இத் தகைய பத்துப்பாசுரங்களைத் திருவாய்மொழி' என்றும் ஏனைய ஆழ்வார்களின் தொகுப்பைத் 'திருமொழி' என்றும் வழங்குதல் வைணவ மரபு. எ.டு. பெரியாழ்வார்திருமொழி, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி என்பன