பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 3亨 நின்று நினைக்கப் புக்கால் சுமையி னுள் தடந் தாமரை மலரும்தண் திருப்புலியூர் முனைவன் மூவுல காளிஅப்பன் திருவருள் மூழ்கினளே (5) (புனை-பூணுதல்; புதுக்கணிப்பு-வடிவில் பிறந்த புதுமை; முனைவன் - முன்னோன்; ஆளி-ஆள்பவன்) என்பது பாசுரம். தலைமகளிடத்துக் காணப்பெறும் மூன்று சிறப்புகளை எடுத்துக்காட்டி தன் ஊகத்தை உறுதிப்படுத்துகின்றாள் தோழி. (1) அவள் அணிந்திருக் கும் ஆபரணங்கள் முன்பு நாம் பூட்டினாற் போல் இல்லை; கலைத்துப் பூண்டாற்போல் தோன்றுகின்ற தன்றோ?' என்கின்றாள். (2) 'உடுத்தின ஆடையும் நாம் உடுத்தினபடி இல்லை. தலைப்பு மாற்றி உடுத்தின மாதிரி பல்லவா உளது? வேறுபாடு தோன்றவில்லையா?' என்று ஆடையின்மீது கவனத்தை ஈர்க்கின்றாள். (3) இவள் வடிவிலும் பிறந்திருக்கும் புதுமைகள் தோன்றவில்லையா? இதற்கு முன்பு இது கோடையோடின வயல் போலே யன்றோ இருந்தது? இப்போது நீர் பாய்ந்த வயல் போலே தோன்றும் செவ்வியைப் பாருங்கள்’ என்கின்றாள். "காலம் என்னும் ஒரு பொருள் உள்ளவரையிலும் நின்று ஆராயப் புகுந்தாலும், இவளிடம் பிறந்துள்ள அழகுகள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதவை என்பதையும் உணர்த்துகின்றாள். எம்பெருமானுடைய படிகளையே நினைக்க முடியாதபோது அவன் திறத்தில் ஈடுபட்டா ருடைய (அடியார்கள்) படிகள் நினைக்கும் தரமன்று. இவற்றால் முனைவன் மூவுல காளியப்பன் திருவருள் மூழ் கினளே என்று இயற்கை புணர்ச்சி நடைபெற்று விட் டதை உறுதிப் படுத்துகின்றாள். 'மேற்கூறிய சான்றுகள் மட்டிலுமா? வேறு சான்று களும் உள்ளன என்கின்றாள்.