பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.3 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை திருவருள் மூழ்கி வைகலும் செழுநீர்நிறக் கண்ணபிரான் திருவருள் களும்சேர்ந் தமைக்(கு)அடை யாளம் திருந்த உள் (6) என்று கூறுவதை நோக்குங்கள். எப்பொழுதும் அவன் திருவருளிலேயே மூழ்கிக் கிடக்கின்றாள். அவனுடைய திருவருள் இவளிடம் சேர்ந்தமைக்கு மறைக்க முடியாத அடையாளங்கள் பல உள்ளன என்று கூறி ஒன்றினை மட்டிலும் காட்டுகின்றாள். திருவருள் கமுகு ஒண்பழத்தது மெல்லியழ் செவ்விதழே (6) (கமுகு-பாக்குமரம், இதழ்-உதடு)

  • எம்பெருமான் திருவருளால் இத்திருப்பதியில் வளர்ந்த கமுகு-திருவருள் கமுகு-ஈன்ற செவ்விய பழத்தின் நிறத் தையல்லவா ஒத்துள்ளது இவளது உதடுகளின் நிறம்?. இதனை நீங்களே ஆய்ந்து பார்க்கலாமே என்கின்றாள். இவ்விடத்தில் திருவருள் கமுகு' என்றதற்கு இன்சுவுை மிக்க ஈட்டின் திருவருட் கமுகென்று சில உண்டு;அதாவது நீரால் வளருகை யன்றிக்கே பெரிய பிராட்டியாரும் சர் வேசுவரனும் கடாட்சிக்க, அத்தால் வளருவன சில” என்ற பகுதி எண்ணி எண்ணி மகிழத்தக்கது.

இத்திருப்பதியின் இயற்கைச் சூழலைக் கூறுவாள்போல் அங்கு அஃறிணைப் பொருள்களும் கூட ஒன்றோடொன்று கலந்து பரிமாறி வாழா.நிற்கும் என்பதனையும் காட்டு கின்றாள். மெல்லிய இலைத் தழைப்பையும் அழகினை யும் உடைய வெற்றிலைக் கொடி முதிர்ந்து இளகிப் பருத்த கமுகமரத்தைத் தழுவி நிற்கின்றது. (வெற்றிலை) தன் கணவனான கமுகுக்குத் தன் உடம்பை முற்றுாட் டாகக் கொடுக்கும் போலே கானும்’ என்பது ஈடு. இதற்குமேல் தென்றற் காற்று வாழைத் தோப்பில் வீசா