பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் அறம் 39 நிற்கின்றது. இப்படிப்பட்ட வாய்ப்பு அமைந்த தலத்தில் இவளும் தான் உகந்த பொருளை அணையப் பெற்றது வியப்பு அன்று. முறையே என்று குறிப்பிடுகின்றாள். 'மல்லல்.அம், செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள் இம் மடவரலே' (7) என்ற தோழியின் கூற்றினை நேர்க்குங் கள். மேலும், 'படஅரவு அணையான்தன் நாமம் அல் லால் பரவாள் இவளே (8) என்ற தோழியின் கூற்றை யும் சிந்தியுங்கள். இத்திருப்பதி எம்பெருமானின் திரு நாமமே யன்றி வேறொரு பெயரையும் சொல்வதற்கில்லை. அங்ங்னமே பரவாள் இவள் நின்றுஇராப்பகல் ... திருப் புலியூர் புகழன்றி மற்றே (9) என்ற பாசுரப்பகுதியால் திருப்புலியூரின் புகழை வாய்விட்டுச் சொல்லுவது தவிர வேறொன்றும் அறியாள் இத்தலைவி என்கிறாள்.இதனா ஆம் இத்தலத்து எம்பெருமானுடன் இவளுக்குக் கலவி நேர்ந்திருக்க வேண்டும் என்பதனை மேலும் உறுதிப் படுத்துகின்றாள். இறுதியாக மேற்கூறிய காரணங்கட்கெல்லாம் முத் தாய்ப்பு வைத்தமாதிரி இதற்கு வேறு விதமான முடிவும் கூற இயலாதவாறு பிறிதொரு காரணம் காட்டுகின்றாள் தோழி. அன்றிமற் றோருபாய மென்?இவள் அம்தண்து ழாய்க்கமழ்தல் நின்ற மாயப்பி ரான்திரு வருளாமிவள் நேர்பட்டதே (10) (உபாயம்-காரணம்; கமழ்தல்-மனம் வீசுதல்) 'இவளது உடம்பில் அழகிய குளிர்ந்த திருத்துழாயின் மணம் வீசுவதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்? என் உடம்பிலாவது உங்கள் உடம்பிலாவது திருத்துழா யின் மணம் வீசுகின்றதா? எம்பெருமான் திருமேனியை அணைந்தாலல்லது இம்மணம் வீசுவதற்குக் காரணம்