பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

玺2 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை அவன் என்னை மணப்பது தவறுமாயின், நம்குடிக்கு அது வடுவாக அமைந்து விடும். தோழி, நயம்புரிந்து 'இன்னது: செய்தாள் இவள் என மன்னா உலகத்து மன்னுவது புரையே’’’’ என நொதுமலர் வரைவுக்கு மனமுரசு இயம் பியவழி, கற்புடை நல்லாள் தாய்க்கு அறத்தொடு நிற்க, வேண்டும் என்ற குறிப்பைத் தோழிக்கு உணர்த்துவது அறியத்தகும். இன்னது செய்தாள் இவள்’ எனத் தலை: மகள் தன் களவை வெளிப்படையாகப் பகரப் பணிக்குங் கால் கற்புக்கு நாண் பலியாதலைக் காணலாம். இவ்வறத்தொடு நிற்றல் ஏழு பகுதிகளாக நடிை. பெறும் என்று கூறுவர் தொல்காப்பியர். எளித்தல் ஏத்தல் வேட்கை உரைத்தல் கூறுதல் உசாவுதல் ஏதீடு தலைப்பாடு உண்மை செப்பும் கிளவியொடு தொகைஇ அவ்வெழு வகைய என்மனார் புலவர்' என்பது அவர் கூறுவது நூற்பா. இதில் எளித்தல் என் பது, தலைவன் நம்மாட்டு எளியவன் என்று கூறுதல். அதனது பயன் மகளுடைத் தாயர் தம்வழி ஒழுகுவார்க்கு மகட்கொடை வேண்டுவாராகலின் எளியன் என்பது கூறி அறத்தொடு நிற்கப்பெறும். ஏத்தல் என்பது, தலைவனை உயர்த்துக் கூறுதல். அது மகளுடைத் தாயர் தலைவன் உயர்ந்தான் என்றவழி மனமகிழ்வாராகலின் அவ்வாறு கூறப்பெற்றது; உயர்த்துக்கூறி அறத்தொடு நிற்கப்பெறும். வேட்கையுரைத்தலாவது, தலைவன்மாட்டுத் தலைவிடி வேட்கையும் தலைவிமாட்டுத் தலைவன் வேட்கையும். கூறுதல்: வேட்கை கூறி அறத்தொடு நிற்கும். கூறுத லாவது, தலைவியைத் தலைவர்க்குக் கொடுக்க வேண்டும். என்பது படக் கூறுதல். உசாவுதல் என்பது, வெறியாட். 34. கவி - 54, 35. தொல். பொருளியல்-12 (நச்)