இக்காலம்
277
காதல் திருமணத்தையும், விதவைகள் மறுமணத்தையும் ஆதரிக்கிறார் புரட்சிக் கவிஞர், பாடல்களில் வேகமும் விவேகமும் காணப்படுகின்றன:
'காதலிருவர்களும் - தம்
கருத்தொருமித்தபின்
வாதுகள் வம்புகள் ஏன்?- இதில்
✽✽✽
'வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ?
பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்
இளைஞர்களுக்கு ஏற்ற முறையில் நிலவை வருணிக்கும் பொழுது புதுப்பொருள் துலங்கப் புதுப் பார்வையோடு நிலவைக் காண்கிறார் கவிஞர்:
'முழுமை நிலா அழகுநிலா
முளைத்தது விண்மேலே- அது
பழமையிலே புதுநினைவு
கவிஞரின் சீர்திருத்த உள்ளம்,
'சாதிமத பேதங்கள் மூடவழக் கங்கள்
தாங்கி நடை பெற்றுவரும் சண்டையுல கிதனை
ஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம்; பின்னர்
என்னும் அடிகளில் பளிச்சிடுகின்றது.
மேலும் இவர் 'வலியோர் சிலர் எளியோர்தமைவதையே புரிகுவதா?' என்று வினாக்குரல் எழுப்பி,