சங்க காலம்
73
பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை யிலங்கெயி றாக
- குறுந்-125
சங்கப் பாடல்களில் ஓசையினிமையினைக் காணலாம் . சான்றாகத் திருமுருகாற்றுப்படையின் இறுதி அடிகள்,
'இழுமென இழிதரு மருவிப்
என முடிந்துள்ளன. தமிழ் மொழிக்கே உரிய சிறப்பான 'ழகரம்' ஈரடிகளில் நான்கிடங்களில் வந்து நல்ல ஓசையினைத் தருகின்றது.
தமிழ் மக்களின் வாழ்வு புகழ் நிறைந்த பெருவாழ்வாய்த் துலங்கியது.
'புகழெனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின்
- புறம். 182
'மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர்
-புறம். 165
என்ற புறப்பாக்கள் அவர் தம் புகழ் வாழ்வினை வெளிப் படுத்துவன.
தமிழ்நாட்டின் பொருளாதார வளம் பட்டினப்பாலையில் பின்வருமாறு பேசப்படுகின்றது.
'நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்
கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை
பொற்காற் புதல்வர் புரவியின்றி உருட்டும்
- பட். 22-25
தமிழகத்தின் ஏற்றுமதி, இறக்குமதி காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் வளமுற நிகழ்ந்தன. இதனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார்,