பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

12. திரிகடுகம்

இதன் ஆசிரியர் நல்லாதனார். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று பொருள்களால் ஆன மருந்து உடல் நோயினைப் போக்கல் போல இதன் பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்படும் மூன்று கருத்துகள் உளநோயைப் போக்குதலின், இந்நூல் இப்பெயரைப் பெற்றது. மனிதன் மேற்கொள்ள் வேண்டிய நன்னெறிகளை இந்நூல் அழகுபடக் கூறுகிறது.

‘ தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்;
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்"
கோளாளன் என்பான் மறவாதான்; இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது'

இப்பாடல் சுற்றமாகத் தழுவிக் கொள்ளத் தக்கவரை அறிவுறுத்துகிறது,

13. ஆசாரக் கோவை

இதன் ஆசிரியர் பெருவாயில் முள்ளியார், காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு. இந்நூலில் உணவு கொள்ளும் முறை, உறங்கும் முறை, உடையணியும் முறை, நீராடும் முறை முதலான நடைமுறைச் செய்திகளைக் கூறுவதால் இஃது -ஆசாரக் கோவை எனப் பெயர் பெற்றது.

‘வைகறை யாமம் துயிலெழுந்து, தான் செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து, வாய்வதில்
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையோர் கண்ட முறை'

14. பழமொழி

இதன் ஆசிரியர் முன்றுரையரையனார். ஒவ்வொருபாட்டின்