பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

எனும் பாடல் இவரது அகத்துறைப் புலமைக்கும் தக்க எடுத்துக் காட்டுகளாகும்.

இவர் பாடிய பாடல்கள் முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

திருநாவுக்கரசர்

இவக் வாகீசர் எனவும் அழைக்கப்பெறுகின்றார், இயற்பெயர் மருள் நீக்கியார்; தமக்கையார் திலகவதியார் இவரைச் சமண சமயத்தினின்றும் சைவத்திற்குக் கொண்டு வந்தார். சமண சமயம் புக்கவரை இறைவன் சூலைநோய் தந்து ஆட்கொண்டார்.

மகேந்திரவர்மன் காலத்தவராதலின். இவர் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதி என்பர்.

இவர் பாடியவை 4900 என்பர் ; கிடைத்தவை 3066; இவை 312 பதிகங்களுள் அடங்கும். இவர் பாடிய விருத்தப்பா. தாண்டகம் எனப்பெயர் பெறும். இவரைத் தாண்டக வேந்தர் எனவும் அழைப்பர்.

'நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணியறிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை,

இவ்வரிகள் இவரது அஞ்சா நெஞ்சினைப் புலப்படுந்து வனவாகும்.

'மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே'

இப்பாடல் இவரது இறையுணர்வை இயம்பவல்லது.