பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

அங்கை வேலோன் குமரன் பிள்ளை;
தேவி யார்கோற் றட்டி யாளர்
உங்களுக்குஆட் செய்ய மாட்டோம்
ஒண்காந்தள் தளியு ளீரே'

இஃது அவரது நகைச்சுவைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் பாடியவை திருவாசகமும், திருக்கோவையாரும் ஆகும். இவை எட்டாம் திருமுறையைச் சேர்ந்தனவாகும்.

இவர் திருவாதவூரில் பிறந்தவர்; தந்தை சம்புபாதாசிருதர்; தாய் சிவஞானவதியார். இறைவர் திருப்பெருந்துறையில் குருத்த மரத்தடியில் குருவடிவாய் எழுந்தருளி இவரை ஆட்கொண்டார். அரிமர்த்தன பாண்டியன் பரி வாங்கத் தந்த பொருளை இவர் கோயில் திருப்பணிக்குச் செலவிட்டார். இவருக்காக இறைவர் பிட்டுக்கு மண் சுமந்து பாண்டியன் கைப் பிரம்பால் அடிபட்டார்.

இவர் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர்.

திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்னும் பழமொழி இவர் பாடலின் சிறப்பைப் புலப்படுத்தும். இராமலிங்க அடிகளும் 'வான் கலந்த மாணிக்கவாசகர்' என்று தொடங்கும் பாடலால் இவர் பாடல் பெருமையை விளக்குகிறார்.

சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல் எனும் நான்கு அகவற் பாடல்களும் திருவம்மானை, திருப்பொற் சுண்ணம், திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருப்பொன்னுசல் ழுதவிய மகளிர் ஆடல்களை அடிப்படையாகக் கொண்ட பகுதிகளும் இதில் இடம் பெற்றுள்ளன.