பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152


மாய்க் கூறப்பட்டுள்ளது. பல்வேறு க சில களே த் தெரிந்துகொள்ள விரும்பும் எவருக்குமே இலத்தீன் மொழியறிவு நலம் பயக்கும் எனவும், கிறித்துவம் பரப்பும் பணியில் ஈடுபடும் துறவியர்க்கும் அது மிகவும் இன்றியமையாதது எனவும் பாயி ர ம் கூ று கி றது. இந்நோக்கத்திற்காகவே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மற்றும், பா யிர த் தி ன் இரண்டாம் பத்தியின் இறுதி யிலுள்ள

“...... தமிழிலே முன்னிருந்த இலத்தீ னிலக்கண நூற் போதாமையா யிருந்ததைப் பற்றி யிதை யேற் படுத்தத் துணிந்தோம்.

என்னும் பகுதியால், இதற்கு முன்பே இலத்தீன் இலக்கணத்தைப் பற்றித் தமிழில் சில நூற்கள் எழுதப்பட்டிருந்தமையும், அ வை போ து மான அளவின்றிச் சுருக்கமா யிருந்தமையும் புலப்படும். (இது குறித்து இத்தலைப்பின் இறுதியில் விவரம் தரப்பட்டுள்ளது.) எனவே, அவற்றினும் நோக்க இந்நூல் ஒரளவு விரிவானது என்பது வெளிப் படை. இவ்வாறு தமிழ்-இலத்தீன் பாலம் அமைக் கப் பா டு ப ட் ட பலரும் மிகவும் பாராட்டற் பாலராவர்.

இனி, இந்நூலில் கூறப்பட்டுள்ள செய்திகளைப்

பற்றிய வி வ ர ம் அ றி ந் து கொள்வதற்காக, நூலிலுள்ளாங்கு ‘பொருளட்டவணை வருமாறு: