பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

பார்த்துள்ள இலத்தின் பகுதிக்கும் இந்த ஆங்கில மொழிபெயர்ப்புக்கும் இடையே சிறு சிறு வேறு பாடு இருப்பது எண்ணத்தக்கது. வீரமாமுனிவர் இலத்தீன் மொழியில் எழுதிய ‘செந்தமிழ் இலக் கணச் சுருக்கம் என்னும் நூலேப்பற்றிய விவரம் முன்பு தரப்பட்டுள்ளது. (பக்கம் : 78 - 76). அங்கே, நூலின் முதல் பாகத்தின் முதல் இயலின் தொடக்கத்தில், எழுத்துக்கள் சாரியை பெறுவதைப் பற்றிக் கூறும் இலத்தின் பகுதி (பக்கம் 75) தரப்பட்டுள்ளது. அதன் மொழிபெயர்ப்புதான் மேலே தரப்பட்டுள்ள ஆங்கிலப்பகுதி. இலத்தீன் பகுதியில் இல்லாத சில செய்திகள் ஆங்கில மொழி பெயர்ப்பில் உள்ளன. ‘அ’ என்னும் எ ழு த் து ‘கரம்’ என்னும் சாரியை பெற்று ‘அகரம்’ என்று கூறப்படும் என்று மட்டும் இலத்தீன் பகு தி கூறுகிறது. ஆங்கில மொழி பெயர்ப்போ, இந்தச் செய்தியுடன், திருவள்ளுவர் அகர முதல வெழுத் தெல்லாம் என்று கூறியிருக்கிறார் என எடுத்துக் காட்டும் தந்துள்ளது. இந்த எடுத்துக்காட்டு இலத் தீன் பகுதியில் இல்லை. அடுத்து அதைத் தொடர்ந்து, இலத்தின் பகுதியில், ஆய்த எழுத்துபற்றிக் கூறு மிடத்தில் கொடுக்கப்பட்டுள்ள இது, இஃது என்னும் சொற்கட்குப் பதிலாக, ஆங்கில மொழி பெயர்ப்பில் அது, அஃது என்னும் .ெ சா ற் க ள் இடம் பெற்றுள்ளன; மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்பில், அஃது’ என்னும் ஆட்சிக்கு எடுத்துக் காடடாக,