பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94அ.ச. ஞானசம்பந்தன்



நார: அது என்னவோ எனக்குச் சொல்ல மனம்
பிடிக்கவில்லை. ஒருவேளை கேள்விப்பட்டது
தவறுதலாயிருந்தால்?
ஆதி: தவறுதலாயிருந்தால் இருந்துவிட்டுப் போகிறது.
நார: பாதகமில்லையே? -
ஆதி: இல்லை சுவாமி.
நார: ஆனால், கேள்.
ஆதி: சொல்லுங்கள் சுவாமி.
நார: நான் இப்படிச் சுற்றிக் கொண்டு வரும்போது
லங்காபுரம் போயிருந்தேன்.
ஆதி: சுவாமி! தாங்கள் லங்காபுரம் போனதும்,
மங்காபுரம் போனதும் நான் கேட்கவில்லை.
என் புதல்வியைப் பற்றிய சமாசாரந்தான் கேட் கிறேன்.
அதைச் சொல்லுங்கள்.
நார: அதைத்தானே சொல்ல நினைத்தேன். அதற்குள்
பதறுகிறாயே?
ஆதி: இப்பொழுது சொல்ல நினப்பதுதானோ?
இன்னும் நினைத்தாகவில்லையோ? அதற்குள்ளே
சொல்லப் புகுந்தது? லங்காபுரம்
போனது கிளைக்கதையாக்கும் சுவாமி! விருதா
நேரம் போக்கவேண்டாம். அங்கு போனது,
இங்கு போனது என்ற உபாக்யானங்களெல்லாம்
எனக்குத் தேவையில்லை. என் புதல்வியைப்
பற்றிய சமாசாரம்-சொல்லுங்கள்.
நார: சரி, சரி. நீ மிகு ஆத்திரமுடையவனாக
இருக்கிறாய். போதும், போதும், (போக
எத்தனிக்கிறார்)