பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆக,
சிறியதான நூலில் அமைந்தாலும்
அணுத்திறன் வாய்ந்த ஆக்கங்கள் இவைகள்.
இவற்றுக்கு,
மரபு வழிவந்த மேடை நாடகத்தின்,
வேதம் அறிந்த ‘இலங்கேஸ்வரனாக’
வீறுடன் செயலாற்றும் மனோகர் அவர்கள்
அழகிய ஆரம் அணிவித்துள்ளார்.
ஐயா சொல்வதுபோல்..... ‘தங்கக்குடத்திற்குத் திலகமிட்ட’ செயல் அது.

நிறைக்குமுன்,
இந்நூலைச் சிறப்பாக்க -
ஐயாவின் ஆசியுள்ள -
டாக்டர் சிவராசனும், கெளரிசங்கர் அங்கிளும்,
இலக்கிய முனைவர். தெ. ஞானசுந்தரம் அவர்களும்
அதிகமான சிரத்தையுடன் எழுத்துச்சீர் செய்துள்ளார்.

ஐயாவின் எழுத்துக்களை நூலாக்கும் விருப்புள்ள
கங்கை புத்தகத்தார் விரைவாக வெளிக்கொணர்ந்தார்.

இனி,
‘தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்’
பனுவலாக எங்கும் பவனிவந்து உளம்நுழைய
ஐயாவின் ஆசிகளும்
இறையருளும் உதவட்டும்.