இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்
63
இருவரிடையே சண்டை மூள்கிறது. வல்லரக்கன் கூற்றாக இதோ ஒரு பாடல்:-
- காய் பசிக்கனல் மூளலுற்றது
- கான கத்தினில் வாழ்ந்திடும்
- பாய் தொழிற்புலி சிங்கம் யானைகள்
- பன்றி மான் முயல் காண்கிலேன்
- தாய் தகப்பனை நீங்கியிங்குத்
- தனித்து நித்திரை செய்ததேன்
- வாய் துடிக்குது தின்பதற்குனை
- வாவெனக் குணவாகவே!
வல்லரக்கனின் இந்தக் கொடிய அழைப்பைக் கேட்ட அபிமன்யு அதற்கு விடையாக இதோ ஒரு பாடலைப் பாடுகிறான்:-
- தீமையதைப்புரி ராவணனைச் சில
- தேடி எடுத்தொரு வாளியினால்
- ராமனெதிர்த்துயிர் போக வதைத்தது
- நாடறியக்கதை யானதடா
- நீமதமுற்றெனதோடு மெதிர்த்தனை
- நீடுநிலத்தினிலே விழவே
- தாமதமற்பமிலாதுனை யித்ததி
- சாடியகற்றுவன் மாறிலையே
இராமன் வரலாற்றை உதாரணமாகக் கொண்டு விளங்கும் இந்தப் பாடலுக்குரிய சந்தத்தையும் சுவாமிகள் இராமாயணத்திலிருந்தே எடுத்துள்ளார் என்று அறிகிறோம். இப்பாடல் கம்பநாடனுடைய சந்தப்பாடலின் ஓசையைப் பெற்றுள்ளது. கங்கையின் எதிர்க்கரையில் பரதனும் அவனுடைய சேனையும்