66
அ.ச. ஞானசம்பந்தன்
மூன்று உணர்ச்சிகள் இங்கேயுள்ளன என்று கூறினோம். எனினும், இம்மூன்றினுள் தலை தூக்கி நிற்பது அவலம் அல்லது துயர உணர்ச்சியேயாகும். எனவே ஏனைய இரண்டு உணர்ச்சிகளாகிய வியப்பு, சினம் என்பவற்றின் சாயலை ஒரளவு காட்டிக் கொண்டு, அதே நேரத்தில் துயர உணர்ச்சியை மிகுதியும் காட்டுதற்குத் துணை புரியும் ஒர் இராகத்தை - அதாவது நாத நாமக் கிரியையை ஆசிரியர் தேர்ந்தெடுத்தது அவருடைய பேராற்றலைக் காட்டுவதாகும். அந்த இராகத்தில் அவர் அமைத்துள்ள பாடலிலும் ஒரு சிறப்பைக் காண முடிகின்றது.
நெட்டெழுத்து எண்ணிக்கை | |
காட்டில் வந்தனை தோள்வலி மாமனைக் | |
கண்டதுண்டம்செய்தின்று வதைத்தனை | (7)
|
தாட்டிகத்துடன் போர்புரிந் தென்னோடு | |
தர்க்கமாடிச் சளைக்காது நின்றனை | (7)
|
மேட்டிமைத் தொழில் கண்டு மகிழ்ந்தனன் | |
வில்லிலே மிக வல்லவனுன் குலம் | (3)
|
கேட்டறிந்திட இச்சை கொண்டேனதால் | |
கிட்டிவந்துரைப்பாயிது வேளையே | (8)
|
இப்பாடலில் மொத்தம் 25 நெட்டெழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன. பாடலின் ஒவ்வோர் அடியிலும் முதற் சீரும் இறுதிச் சீரும் நெடிலில் தொடங்கி நெடிலில் முடிகின்றன. மூன்றாவது அடி மட்டும் இவ்விதிக்கு விலக்காக முதற்சீரில் நெடிலுடன் தொடங்கி இறுதிச் சீரில் இரு குற்றெழுத்துக்களுடன் முடிகிறது. இந்த அடியையும் ஏனைய அடிகள் போலவே நெடில் கொடுத்து முடித்திருக்கலாம். அவ்வாறு செய்தால்