தமிழ் நாடக வரலாறு 117
கைராட்டினத்தின் பெருமையோடு தென்னை மரத்தைக் கள் இறக்கும் குத்தகைக்கு விடுவதையும் இந்தப் பாடலில் கண்டிப்பதைக் காணுகிறோம்.
காந்தியடிகளின் கிலாபவுத் இயக்கத்தை ஆதரிக்கும் விருத்தம்:
ஈரம்கிடக்கும் நெஞ்சிந்தியரே மக்கு ஈசனருள் நேரங்கிடைத்திந்த காந்தியடிகள் நிகழ்த்தும் முறை சாருங்கில்லா ஆபத்துக் காரங்ணதான்! மன்னர் தாக்க
&\{Hols) பீரங்கி என் செய்யும் வாருங்கள் ஒற்றுமை காந்தியடிகளைப் பற்றி அக்காலத்தில் மிகப் பிரபலமாக எங்கும் முழங்கிய ஒரு பாடல்:
காந்தியோ பரம ஏழை சன்யாசி கடவுளின் பிரதிநிதி யான விஸ்வாசி விடுதலைப் போருக்கு மக்களை அறைகூவி அழைக்கும் இந்தப் பாடல் ஒரடி முத்துவேல் பிள்ளை பாடியது:
மீசையுள்ள ஆண்பிள்ளைச் சிங்கங்களே நீங்கள் வெளியினிலே வாருங்கள்விடுதலைப்போர் வெற்றிப்படையில் சேருங்கள் (மீசை) ஈசன் அருள் படைத்த இந்து முசல்மான்களே -கம் தேச விடுதலைக்கே தீரமுடன்
திரண்டுவீரவைராக்யம் கொண்டு (மீசை) கீழ்வரும் பாடல்-சங்கரதாஸ் சுவாமிகளின் மாணவர் இசக்கிமுத்து வாத்தியார் எழுதியது. இதை ஆர்மோனியம் வாசுதேவ நாயர் நாடக மேடைகளில் பாடக் கேட்டிருக் கிறேன். உத்திரவுபோல் நடக்கணும்-இந்து முஸ்லீம்க்ள் ஒற்றுமையைக் கட்டிக் காக்கணும்-மத வித்தியாசத்தைத் தவிர்க்கணும்-இங்கிருக்கும் வெள்ளையரைக் கப்பல் ஏற்றணும்-காந்திஜி பின் (உத்திரவு)