பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தமிழ் நூல் அறிமுகம்

களையுடைய குறிஞ்சிச் செடிகளின் மலர்களைக் கெகண்டு பெரிய தேனடைகளை வண்டுகள் செய்தற்கு இடமாகிய நாட்டையுடைய காதலனோடு யான் செய்த நட்பானது நிலத்தைக் காட்டிலும் விரிவானது; வானத்தைக் காட்டி லும் உயர்ந்தது; கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழம் உடையது' என்பது இதன் பொருள்.

பாட்டிலே மிகவும் இனிய தேனை, பெரிய தேனை, வண்டுகள் இழைக்கும் நாடன், இந்த இனிய பெரிய காதலை என்னிடம் உண்டாக்கினான்’ என்ற குறிப்புத் தோன்றுகிறது.

சங்கப் புலவர்களுக்கே உரிய இயற்கை ஒவியமும் உவமைகளும், உள்ளுறையாகிய குறிப்பும் பாடல்களில் விரவி நின்று இன்பம் தருகின்றன.