பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 . தமிழ் நூல் அறிமுகம்

அக்காலத்து வழக்கங்கள் பலவற்றை இடை யிடையே காணலாம். மணம் புரிவார் எரிவலம் செய் தலும், இசையால் மானை மயக்கிப் பிறகு அதைக் கொல் வதும், ஏறு தழுவினவருக்குத் தம் பெண்ணை மனம் செய்து கொடுத்தலும் போன்றவையும், பழந்தமிழர் வாழ்க்கை முறைகளைக் காட்டும் வேறு பல செயல்களும் கலித்தொகையில் விரவி வருகின்றன. -

சங்ககாலத்துத் தமிழர் நடையைத் தெரிந்துகொண்டு கலித்தொகைப் பூஞ்சோலையிலே புகுந்தால் நேரம் போவது தெரியாமல் அதில் ஈடுபட்டுக் கிடப்போம்.