பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 தமிழ் நூல் அறிமுகம்

நுனியில் காயத்தை உண்டாக்கும். அத்தகைய வழியில் என்னைப் பிரிந்து செல்வது அறத்தாறு அன்று” என்று சொல்லலாம். துணிவு வரவில்லை.

ஒன்றும் அறியாதவளைப் போலப் பொய்யான புன்முறுவலைக் காட்டிக் கொண்டு வந்து நின்றாள். அவன் அவளை ஏறெடுத்துப் பார்த்தான். அவள் கண்கள் அவன் கண்களைச் சந்தித்தன. உள்ளே உள்ள துன்பம் இப்போது உடைத்துக் கொண்டு வரத் திமிறியது. அவள் கண்ணில் நீர் மல்கியது. சட்டென்று குனிந்து கொண்டாள். குழந்தையின் உச்சியை மோப்பது போலக் குனிந்தாள். * -

அவள் உள்ளத்தில் உள்ள துயரம் பெருமூச்சாக வெளிப்பட்டது. அதில்தான் எத்தனை வெப்பம்!

மார்பிலே அனைத்துப் பிடித்திருந்த குழந்தையின் உச்சியிலே அவள் பெருமூச்சுத் தாக்கியது. அங்கே சூட்டி யிருந்த மெல்லிய மலர் அந்த மூச்சினால் மிக நுட்பமாக வாடியது. - -

கணவன் இதைக் கவனித்தான். குபுக்கென்று அவன் கண்களில் சுரந்த நீர் அவள் பார்வையை மறைத்ததைக் கண்டான். அவள் குனிந்து பெருமூச்சு விட்டபோது குழந்தையின் தலையில் உள்ள மலர் வாடுவதையும். கண்டான். நுட்பமான அறிவுடையவன் ஆதலால் அந்த மலரின் வாட்டத்திலிருந்து அந்த மங்கையின் இதயமலர் எவ்வளவு தூரம் வாடியிருக்கும் என்பதை உணர்ந்தான்.

இங்கே நாம் இருக்கும் போதே இப்படி வருந்து கிறாளே! நாம் பிரிந்து போனால் உயிர் பிழைத்திருப் பாளா?' என்ற எண்ணம் அவன் மனத்தில் தோன்றியது.